Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மாதா அமிர்தனந்தமயி/கடவுள் கருணை வடிவானவர்

கடவுள் கருணை வடிவானவர்

கடவுள் கருணை வடிவானவர்

கடவுள் கருணை வடிவானவர்

ADDED : அக் 09, 2008 09:50 AM


Google News
Latest Tamil News
<P>துன்பமயமான உலகைப் படைத்தவர் கொடியவர் என்று சிலர் நினைக்கிறார்கள். பணக்காரர்கள் சொகுசாக வாழும்போது மற்றவர்கள் வறுமையில் வாடுவது நியாயமா என்று பலர் வருந்துகிறார்கள். இதுவா கடவுளின் கருணை? என்று பலரும் மனம் நொந்து கொள்கின்றனர்.உண்மையில் கடவுள் சோதனைகளை மட்டுமே கொடுக்கும் கொடியவர் அல்ல. அவர் கருணை வடிவானவர். நியாயமான ஆசைகளைக் கொண்டு ஒழுக்கத்துடன் வாழ்பவர்களுக்கு கடவுளின் கருணை என்றைக்கும் உண்டு. பேராசை கொண்டு அலையாதீர்கள். தர்மநெறிமுறைகளை பின்பற்றி சத்திய வழியில் நடப்பவர்களை கடவுள் நிச்சயம் கரைசேர்க்க தவறுவதில்லை. வேகத்துடன் எதையும் அணுகாதீர்கள். விவேகத்தை வளர்த்துக் கொள்வது பலவழிகளில் நமக்குத் துணை செய்யும். 'அம்மா' என்று ஆண்டவனின் திருப்பாதங்களை சரண்புகுந்து நீயே எனக்குத் துணை என்று கூக்குரல் எழுப்புங்கள். உன்னையன்றி எனக்கு யார் துணை என்று மன்றாடுங்கள். ஜகன்மாதாவின் மனம் உருகி நிச்சயம் உங்களை தனதாக்கிக் கொள்வாள். எது நமக்கு வாழும் வகை என்பதை பல ரிஷிகள் நமக்கு போதித்துச் சென்றிருக்கிறார்கள். அவ்வழிகளை பின்பற்றினால் வாழ்க்கை மேன்மை பெறும். </P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us